Sunday, April 26, 2009

ஓர் இரவு காத்திருப்போம்


இலங்கையில் யுத்தம் மேலும் மேலும் தீவிரம் அடைந்து வரும் இச்சூழலில் அரசியல்வாதிகளின் கருத்து மற்றும் அணுகுமுறை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது..இதில் முக்கியமான மாற்றம் ஜெயலலிதா கூறிய ஈழ அதரவு கருத்து தான்..இப்படி நாள் தோறும் அரசியல் அரங்கில் வெளியிடப்படும் அறிக்கைகள் செத்து கொண்டிருக்கும் தமிழனை காப்பாற்றுமா...
இன்று முக்கிய திருப்பமாக புலிகள் யுத்த நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளதும்,அதை சிங்கள அரசு நிராகரித்ததும் நாம் அறிந்ததே..இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஓர் இரவு காத்திருப்போம் என்று அறிக்கை விடுத்துள்ளார் ..புரியாத புதிராக இருக்கிறது இந்த ஓர் இரவு.முன்னாள் முதல்வர் ஒரே இரவில் எழுதிய கதை தான் பின்னால் ஓர் இரவு என்று திரைப்படமாக எடுக்கப்பட்டது.அதே போல் இவரும் ஒரே இரவில் என்ன செய்ய போகிறார் என்று ஆவலாக உள்ளது ..சரி ஓர் இரவை காத்திருந்து தான் பார்ப்போம்..நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்.

2 comments:

Subas said...

பாதுகாப்பு வலயம்' மீது பாரிய தாக்குதலுக்கான தயார் நிலையில் இராணுவம்: அச்சத்தில் ஒன்றரை லட்சம் மக்கள்

--
http://www.puthinam.com/full.php?2b34OOA4b3d66Dp34d01VoU2a03O4AKb4d34SmA4e0dK0Mtjce0cf1e02cceocYU3e

ithath than avar kooriyiruppar.

Anonymous said...

உலகத் தமிழருக்கு அவசர வேண்டுகோள்
இன்று இரவு விஷ வாயு ரசாயன குண்டுகள் எரிவாயு குண்டுகள் போட்டு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொல்வதற்கு இலங்கை ராணுவம் திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன
தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்
உடனடியாக செய்யுங்கள்
தமிழகத்தில் இப்போது நள்ளிரவு என்று தெரிந்தாலும் ஏதாவது செய்யுமாறு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்