Monday, July 25, 2011

நார்வே தீவிரவாதிக்கு நன்றி





முதலில் ரத்த வெறி பிடித்து அலையும் சர்வதேச சதியான தீவிரவாதம் என்ற அரக்கனுக்கு எனது கண்டனங்கள். நார்வே நாட்டில் நடந்த இரட்டை தாக்குதல்கள் பற்றிய ரத்தக்கறை படிந்த விரிவான அலசலை இங்கே காணலாம். முதலில் சிறிய அளவில் குண்டு வெடிப்பு. ..பிளாஷ் நியூஸ்..பிறகு இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு சில மணி நேரத்தில் ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணி முகாம் நடைபெற இருந்த உட்டோயா தீவில் போலீஸ் உடை அணிந்த இளைஞர் ஒருவர் திடீரென்று புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினான்..மீண்டும் ப்ளாஷ் நியூஸ்..  இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் அருகில் இருந்த ஏரியில் குதித்தனர். சிலர் மரங்கள், செடிகளுக்கு பின்னால் மறைந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் நீரில் மூழ்கியும் 85 பேர் உயிரிழந்தனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த அதிரடிப் படையினர் அந்த இளைஞரை சுற்றிவளைத்து கைது செய்தனர். ப்ளாஷ் நியூஸ் ஓட..ஓட..அல் கொய்தாவா..முஜாஹிதீனா..என்று ஆவலோடு காத்திருந்த அனைவருக்கும் பெரிய ஏமாற்றம்.. 
ஓடி ஒளிந்தவர்களை எல்லாம் தேடித்தேடி, சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியவன் ஒரு கிருத்துவன்.
நார்வே நாட்டு இரட்டை தாக்குதல் பல விஷயங்களை இவ்வுலகிற்கு உணர்த்துகிறது. குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதம் என்ற கண்மூடித்தனமான அவதூறு  நம்பிக்கை தகர்த்து எறியப்பட்டிருக்கிறது. இதற்க்கு நார்வே நாட்டின் நேர்மையான மீடியாக்களும், அரசாங்கமும் மற்றும் ரத்தவெறி பிடித்த அந்த தீவிரவாதியே காரணம். அவர்களுக்கு நன்றி. கொலைகாரன் நினைத்திருந்தால்..கோட்சே பாணியில் முஸ்லீம் பெயரை பச்சை குத்தி இறந்து போயிருக்கலாம்..தாக்குதல் நடந்த மூன்று மணி நேரத்தில் ..பிளாஷ் நியூஸ் என்ற பெயரில் அல் கொய்தா..அல் கொய்தா என்று பரபரப்பை மீடியா ஏற்படுத்தியிருக்கலாம்..அரசாங்கம், அவனை கைது செய்யாமல்..போட்டுத்தள்ளி அவனுக்கு ஏதாவது இஸ்லாமிய பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கலாம். நல்ல வேலை ஓரளவு உண்மை வெளியே வந்துள்ளது..யார் குண்டு வைத்தாலும், ஏன் பட்டாசே கொளுத்தி போட்டாலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பே இதற்க்கு காரணம் என்று சப்பை கட்டு கட்டும் நேர்மையான இந்திய அரசாங்கம் ஆச்சர்யத்துடன் இந்த தீவிரவாத தாக்குதலை கண்டு களித்தது. இக்காலத்தில், முஸ்லீம்களுக்கு  எதிரான சிந்தனை உள்ள ரத்த வெறி பிடித்த ஒருவன் இத்தாக்குதலை நடத்தியுள்ளான். அவன் தீவிரவாதியிள்ளயாம், கொலைகாரனாம் (நன்றி தின மலர்,தின கரன், தின மணி).தீவிரவாதி என்ற சொல்லை முஸ்லீம்களுக்கு மட்டும் கோட்டாவில்  வைத்திருக்கிறார்கள்...முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவது இனி மாற்றி எழுதப்படும் என்பது என் கருத்தல்ல. தின மலர் போன்ற தினசரிகள் இருக்கும் வரை அது முடியாது, காரணம்.. முஸ்லீம்களுக்கு எதிரான இந்த சதி..சர்வதேச சதி..நமது நாட்டில்..மலே கான், அஜ்மீர், ஹைதராபாத் போன்ற நகர்களில் முஸ்லீம்களை குறி வைத்து நடத்தப்பட்ட அனைத்து தீவிரவாத செயல்களும் தினமலர் போன்ற பத்திரிக்கை மற்றும் மீடியாக்களால்  மறக்கடிக்கப்படும். யாராவது விசாரணை என்ற பெயரில் இச்சம்பவங்களை நோண்ட நினைத்தால் அடுத்த தாக்குதலில் அவர் அலேக்காக போட்டு தள்ளப்படுவார். இச்சம்பவங்களை சந்தேக கண்ணோடு பார்க்கும் திக் விஜய் சிங் போன்றோரும் போட்டு தள்ளப்படுவது உறுதி, கட்டுரை எழுதும் நான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் பட்டியலில் கடைசிப்பெயராக சேர்க்கப்படுவேன். காரணம், இங்கே கூறப்படுபவை அனைத்தும் உண்மை, எழுதுபவன் முஸ்லீம்.




(இந்தியா எங்கள் தாய் நாடு 
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் வழியாகும்)


நன்றி
எப்போதோ கேட்ட இஸ்லாமிய பாடல்