தமிழன்..தமிழ்..உணர்வு..ஈழம்..வீரம் ..இனப்படுகொலை..பேரழிவு..ராஜபட்சே .முள்வேலி முகாம்..இதெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா..இருக்கும்..கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையத்திலும் சரி..தமிழர்கள் இதயத்திலும் சரி..அதிகமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் இவை..மதம், ஜாதி, தேசம் போன்றவைகளை தாண்டி...சராசரி தமிழனாகிய என்னைப்போன்றவர்களுக்கு இன்னும் இவ்வார்த்தைகள் சுடுகின்றன..காரணம்..இவ்வார்த்தைகள் மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது....தமிழன் செத்தா இனப்படுகொலை...அவனை கொன்ற ராஜபட்சே மனித மிருகம்..சரி .ஆனால் ஆயிரக்கணக்காக செத்து மடிந்த இந்திய முஸ்லீம்கள்?..என்ன பாவம் செய்தார்கள்? .அவர்களை கொன்று குவித்த மோடி ..இன்று மாபெரும் மனிதர்..அரசியல் உதாரணம் .தன் மக்களுக்கு உண்மையானவராம்...சொல்கிறார் செந்தமிழன் சீமான்..அப்படி பார்த்தால் உங்கள் சிந்தனைப்படி.., சிங்கள இனத்திற்கு உண்மையானவன் ராஜபட்சே..எங்கே..அப்படி ஒரு பேட்டி கொடுங்கள் பார்ப்போம்...யார் இந்த சீமான்.சராசரி தமிழனையும்..இளைஞர்களையும்..உசுப்பேற்றி..உணர்வேற்றி..காவு கொடுத்து..அத்தீக்குளிப்பில் குளிர் காயும் உண்மையான இன துரோகி.
செந்தமிழன் யார் ? இப்போது காரணம் புரிகிறது...சிலர் இப்போது என்னை சந்தேக கண்ணோடு, பார்க்க கூடும், காரணம் தமிழனாய் இருந்தும் நான் ஒரு இசுலாமியன்..ஈழத்தில் தமிழர்கள் செத்து மடிகிறார்களே என்ற ஒரே காரணத்திற்க்காக, என் உணர்வுகளை தமிழ் சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள , இந்த தீப்பந்தம் பதிவு கொளுத்தப்பட்டது..இருந்தாலும் நான் தமிழனில்லை..தமிழ் உணர்வாளன் இல்லை .இழவு வீட்டில் பாரபட்சம் பார்க்கின்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் இல்லை..ஆகையால் தான்..உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் முதன் முதலாக தீக்குளித்தான் சகோதரன் அப்துல் ரவூப்..இறந்த முறை தவறாக இருந்தாலும் அவன் உணர்வுகள் நேர்மையானவை...இத்தீ மற்ற சகோதரர்களையும் பின்னர் காவு வாங்கியது..குளிர் காய்ந்தவர்...காய்ந்து கொண்டிருப்பவர் சீமான் .நான் கேட்கிறேன்..ராஜபட்சே போர் குற்றவாளி என்றால்..மோடி? மனித இனத்தின் முதல் எதிரியல்லவா ..போர் குற்றவாளிப்பட்டியலில் ராஜபட்சேவோடு மோடியின் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள் தமிழ் உள்ளங்களே.முதல் வரிசையில் மோடியின் பெயர் இருக்கட்டும்.அனுபவத்தில் மூத்தவரல்லவா....இங்கு நான் முஸ்லீம் என்றோ..ஹிந்து என்றோ வேறுபாடு காணவில்லை..இன்று ஆங்காங்கே..இணையத்தில்..ராஜபட்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க தமிழ் உள்ளங்கள் பாடுபட்டு வருகின்றன..அது மட்டும்போதாது..அவன் சர்வதேச அகதியாக்கப்பட வேண்டும் என்பது எனது நிறைவேறா ஆசை..ஆனால்..குஜராத்தில் இறந்து மடிந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் சகோதர..சகோதரிகளை எப்படி மறப்பது...ராஜ பக்ஷே விற்கு இனப்படுகொலையை அறிமுகம் செய்த மோடியை என்ன செய்வது..அந்த மோடியை புகழ்ந்த சீமானை இப்போது என்ன சொல்வது .செந்தமிழன் சீமான் அவர்களே...வன்னிக்காடுகளில் ஆரம்பித்த உங்கள் அரசியல் பயணம் எங்கே அழைத்து செல்கிறது?..தமிழகத்தில் ...தமிழர்கள் பட்டியலில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றி..வெறுப்பேற்றி..சூதாடும் உங்கள் திட்டம் என்ன?..கருப்புச்சட்டை..காவிச்சட்டை அணிய துடிப்பது ஏன்?.எனக்கு கொஞ்சம் புரிகிறது...சர்வதேச தமிழ் உள்ளங்களே உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?
இப்படிக்கு
சராசரி தமிழன்..