Monday, August 17, 2009

பன்றி காய்ச்சல்-பின்னணியில் சர்வதேச கூட்டு சதி

எல்லோராலும் பன்றி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிற ஸ்வைன் ப்ளூ காய்ச்சல் கிட்டத்தட்ட உலகமெங்கும் பரவி வருகிறது என்பது நீங்கள் அறிந்ததே..தினமும் தொலைகாட்சி செய்திகளில் இறப்பு விபரம் பிளாஷ் ஆகிக்கொண்டே இருக்கின்றன..மக்களும் வெளியில் போகாமல்..ஒருவரை ஒருவர் சந்திக்காமல்..கை கொடுக்காமல்..வேற்று கிரக வாசிகளை போல் பீதியில் வாழ்ந்து வருகிறார்கள்..இந்த நோய் பரவிய விதம்..இந்த பரபரப்பு..செய்திகளில் பிளாஷ் ..மருத்துவர்களிடம் மக்கள் அலை மோதும் காட்சி..என்னை சற்று சிந்திக்க வைத்துள்ளது..இந்த நோயின் பின்னால் ஏதோ மர்மம் இருப்பதாக படுகிறது..இன்னும் எளிமையாக சொல்ல போனால்..சர்வதேச சதி இருப்பதாக உணர்கிறேன்..காரணம்..
1) கிட்டத்தட்ட மரணத்திற்கே மருந்து கண்டுபிடித்து விட்ட இந்த காலத்தில் ..இன்னும் இந்த நோய்க்கு மருந்திள்ளயாம் .. அமெரிக்காவை சேர்ந்த பாக்ஸ்டர் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனமும் உலக பொருளாதார சரிவில் சிக்கி ..பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது..நிறுவனம் கிட்டத்தட்ட திவாலாகும் நிலைமைக்கு சென்றது..ஆனால் உலகமெங்கும் இந்த காய்ச்சலுக்கு பயன்படுத்த படும் ஒரே மருந்தை இவர்கள் தான் தயாரித்து வருகிறார்கள் ..இப்போ நிறுவனத்திற்கு டாப் டென்னில் முதலிடம்..

2) இதே மாதிரி உலகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் ...குறிப்பாக அமெரிக்க ஊடகங்கள் பெரும் சரிவை சந்தித்து வந்தன..ஆனால் இப்போது மக்களின் மத்தியில் அருமையாக பீதியை கிளப்பும் அறிய வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது..அரண்டு போன மக்கள் இப்போது தொலைகாட்சி முன் தவம் இருக்கிறார்கள்..டி .வி நிறுவனங்களின் விளம்பர வருமானம் எங்கோ சென்று விட்டது..

3) மற்றொன்று முக மூடி..இந்த முக மூடியின் மூலமாக நிறுவனங்கள் சம்பாதித்திருக்கும் பணம் எவ்வளவு தெரியுமா..10,000 கோடி ..இந்த கொள்ளை லாபம் அதிர்ஷ்டத்தால் அமைந்தது கிடையாது..நிச்சயமாக இது சதி...இந்த நோயின் பரவும் விதத்தை நீங்கள் கூர்ந்து கவனித்தாள் தெரியும்..பகுதி பகுதியாக தான் இந்த நோயை பரவ விடுகிறார்கள்...காரணம் ஒரே நேரத்தில் மருந்தும் முக மூடியும் தயாரிக்க முடியாமல் திணற நேரிடும் என்ற காரநிதினால்..பார்த்து பார்த்து பரப்பி விடுகிறார்கள்..

மேலே கூறிய விஷயங்களை கண்டு யாரும் பீதியடைய வேண்டாம்..போதும்..பயந்தது..மனதை குழப்புவதும் ..பீதி அடைவதும்..ஒரு வகையான மன வியாதியே..

பயம் என்ற சொல்லின்
பயனென்ன?
பயத்தால் மனிதன் இழந்தவையும் உண்டு
அடைந்தவையும் உண்டு
பயம் பலருக்குப் பலவீனம்
இன்னும் பலருக்குப் பலம்
பயத்தின் பலத்தால்
பயன்பெற்ற பலரிலும்
பயத்தின் பலவீனத்தால்
பாழாய்ப் போனவர் பல்லாயிரம் - ஆதலின்
அஞ்சுவதற்கு அஞ்சவேண்டும்
அஞ்சியவருக்கு சதா மரணம்
அஞ்சாதவருக்கு ஒருநாள் மரணம்
மரண பயத்தை வென்றுவிடுபவன்
மாவீரனாகிறான் அல்லது மகானாகிறான் -

நன்றி
கலாநிதி தனபாலன்

Sunday, July 19, 2009

"இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"

இந்த நூற்றாண்டில் அடிமைத்தனம் முற்றிலும் ஒளிந்து விட்டதாக நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்கும் இவ்வேளையில் , நாம் அனைவரும் நம்மை அறியாமல் மாபெரும் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ..மெகா தொடர்களுக்கு முன்னாள் ..இந்தியாவில் அடிமைகளாக வாழ்ந்து பழகி விட்டோம் ..அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் ..ஒரு பக்கம் பெண்கள் எல்லாம் சீரியல் பார்த்து சீரழிந்து வருகிறார்கள் ..ஒரு சாம்பிளுக்கு ..குத்து மதிப்பாக எல்லா தொடர்களையும் பத்து பத்து நிமிடம் பாருங்கள் .ஒரே நேரத்தில் கல்ல தொடர்பை பற்றியும் ,.அண்ணன் பொண்டாட்டியின் கருவை கலைப்பதை பற்றி தம்பி பொண்டாட்டி சிந்திப்பதை பற்றியும் , ஒருத்தனின் இரு மனைவிகள் ஒரு வரை ஒரு வர் கொல்ல துடிப்பதை பற்றியும் , விவாகரத்தை பற்றியும் , சொந்த கணவனை கடத்தி வைக்கும் மனைவியை பற்றியும் .. தொடர்ந்து காலை முதல் இரவு வரை காண்பித்து வந்தால் ...நம்மை அறியாமல் நம் வீட்டில் உள்ள சகோதரிகள் கிரிமினல்களாக மாறி வருகிறார்கள் மெல்ல ..மெல்ல .. .சற்று சிந்தித்து பாருங்கள் ..முன்னாள் கவர்ச்சி நடிகைகளின் போலி கண்ணீரை கண்டு மனம் உடைந்து போகிறார்கள் குடும்ப பெண்கள் ..
மறுபக்கம் ஆண்கள் எல்லாம் பாட்டு கேட்டு வருடக்கணக்கில் தொகுப்பாளினியை டாவடிக்கிறார்கள் …அந்த மூஞ்சிகளை பார்த்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று வாய் கூசாமல் பொய் சொல்லி வருகிறார்கள் ..
ரெண்டு வருடமாக முயற்சி செய்து வருவதாக கூறுகிறார்கள் ..லோவ்வருக்கு டெடிகேட் செய்யனுமாம் ...அதிகாலை முதல் நடுநிசி வரை ..உங்க டி .வி வோளும்மா கொரைங்க ..உங்க டி .வி வோளும்மா கொரைங்க ..என்ற உத்தரவை கேட்டு கேட்டு புளிக்க வில்லை தமிழனுக்கு ..
இதில் அடுத்த கட்டமாக ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி வேறு ..கூத்தாடிகள் நடனமாட ..குத்தாட்டம் போட்டவர்கள் நடுவர்கலாம் ..குலுங்க குலுங்க ஆடி விட்ட பிறகு கெமிஸ்ட்ரி சரியில்லையாம் நடுவர்களுக்கு ..மழையில் நனைந்து புரள்கிறார்கள் ..கட்டி உருள்கிறார்கள் ..இதை கண்டு உசுப்பேரிய நடிகை “கிளிசிட்டீங்க ” என்கிறார் ..எதை ?
நம்மை சிந்திக்க விடாமல் செய்யப்படும் சர்வதேச சதி இது ..குறிப்பாக தமிழகத்தில் தொலைக்காட்சி நடத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சதி திட்டத்தில் பங்கிருக்கிறது .தொடர்ந்து நிகழ்ச்சிகளின் மூலம் வருமானம் பெருக்க நம் மூளையை மழுங்கடிக்கிறார்கள் .ஒரு இனத்தின் வளர்ச்சியை , வாழ்கையை , சிந்தனையை , கலாசாரத்தை அளிக்கும் மாபெரும் பேரழிவு இது ..
தற்ப்போது தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரே ஆறுதல் “மக்கள் தொலைகாட்சி ”.இந்த அடிமைகளின் தேசத்தில் இந்த மண்ணை பற்றியும் ..மனிதர்களை பற்றியும் நிகழ்ச்சிகள் பல நடத்தி வருகிறார்கள் ..வாழ்த்துக்கள் ..
நமீதாவை நம்பாமல் நாட்டுப்புற பாடல்களை நம்புகிறார்கள் ..வோளும்மை குறைக்க சொல்லாமல் ..உரக்க தமிழ் பேச சொல்லுகிறார்கள் ..வாழ்கையை கெடுக்கும் தொடர்களுக்கு மத்தியில் வாழ சொல்லி கொடுக்கிறார்கள் .. காலப்போக்கில் மாறிவிடாமல் , தொடர்ந்து நம் மக்களின் புத்திக்கூர்மையை தீட்டும் வகையில் நிகழ்ச்சிகள் பல நடத்திட எனது வாழ்த்துக்கள்

Sunday, April 26, 2009

ஓர் இரவு காத்திருப்போம்


இலங்கையில் யுத்தம் மேலும் மேலும் தீவிரம் அடைந்து வரும் இச்சூழலில் அரசியல்வாதிகளின் கருத்து மற்றும் அணுகுமுறை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது..இதில் முக்கியமான மாற்றம் ஜெயலலிதா கூறிய ஈழ அதரவு கருத்து தான்..இப்படி நாள் தோறும் அரசியல் அரங்கில் வெளியிடப்படும் அறிக்கைகள் செத்து கொண்டிருக்கும் தமிழனை காப்பாற்றுமா...
இன்று முக்கிய திருப்பமாக புலிகள் யுத்த நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளதும்,அதை சிங்கள அரசு நிராகரித்ததும் நாம் அறிந்ததே..இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஓர் இரவு காத்திருப்போம் என்று அறிக்கை விடுத்துள்ளார் ..புரியாத புதிராக இருக்கிறது இந்த ஓர் இரவு.முன்னாள் முதல்வர் ஒரே இரவில் எழுதிய கதை தான் பின்னால் ஓர் இரவு என்று திரைப்படமாக எடுக்கப்பட்டது.அதே போல் இவரும் ஒரே இரவில் என்ன செய்ய போகிறார் என்று ஆவலாக உள்ளது ..சரி ஓர் இரவை காத்திருந்து தான் பார்ப்போம்..நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்.

என்னையும் கொஞ்சம் கவனிங்க-டி.ஆர்


தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் , ஆளாளுக்கு ஈழத்தமிழர்களை பிரச்சாரத்தின் பகடை காய்களாக பயன்படுத்தி வருகின்றனர்..காங்கிரஸ் காரன்ல இருந்து தி.மு.க,அ.தி.மு.க, ம.தி.மு.க வை தொடர்ந்து பா.ம.க , கம்யுனிஸ்ட் , ம.ம.க ல்லாம் தாண்டி அரசியல் கோமாளிகளான கார்த்திக் , டி.ஆர் வரைக்கும் அத்தனை பேருக்கும் இப்போ ஈழமே கதி..எத்தனையோ கூட்டணி,எத்தனையோ மேடைகள், எத்தனையோ பிரச்சாரங்கள், பார்த்து புளித்து போன நமக்கு ஒரு என்டர்டைன்மன்ட் க்காக சில அரசியல் காமடியன்கள் இந்த தேர்தல் களத்தில் உலா வருகிறார்கள்..சமீபத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த டி.ஆர் அவர்கள் கட்சிகளின் கூட்டணியை நம்பவில்லையாம்..கிரகங்களின் கூட்டணியை நம்பி தான் போட்டியிடுகிறாராம்..இதற்க்கு மேல் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டி.ஆரின் ஆவேச பேட்டி

"இந்த தொகுதியில் கூட்டணி கட்சிகளை நம்பி நான் போட்டியிடவில்லை. கிரகங்களின் கூட்டணியை நம்பியே போட்டியிடுகின்றேன்"


"நான் கள்ளக்குறிச்சி தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் சிவபெருமானின் சங்கரன் என்ற பெயருடைய சங்கராபுரத்தை குறித்தும், ரிஷிகள் வாழ்த்த ரிஷிவந்தியத்தை குறித்தும், சிவபெருமானின் தலையில் நதியாக விழும் கெங்கவல்லியை கடந்து செல்லும் ஆத்தூரை குறித்தும், காடுகள் நிறைந்த ஏற்காடை குறித்தும் உள்ளதால் தேர்ந்தெடுத்துள்ளேன்"

பொறுமைய்யா இருங்க..மிச்சத்தையும் படிச்சிருங்க

"திருச்சியில் எனது கட்சி சார்பில் போட்டியிடும் மன்சூர் அலிகான் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவ புகைப் படங்களை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இதை காவல்துறையினர் தடுத்துள்ளனர். இது எங்கள் பிரசார யுக்திக்கு தடையாக உள்ளது"


தொடர்ந்து விஜய டி.ராஜேந்தர், தான் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றால் அந்த தொகுதிக்கு என்னென்ன செய்வேன் என்று பட்டியலிட்டு பேசினார்..

டி.ஆரின் ஒட்டுமொத்த பிரச்சார காட்சிகள் யு டுபிள் காமடி காட்சியாக பதிவு செய்யப்படும்..

Sunday, April 19, 2009

இனிதே துவங்கியது பவர் கட்..


மீண்டும் இனிதே துவங்கியது பவர் கட்..நீண்ட நாட்களாக நாங்கள் ஆவலுடன் காத்திருந்த மின்சார துண்டிப்பு மீண்டும் ஒரு முறை கோலாகலமாக துவங்கியது..
சென்ற வருடத்தில் மக்கள் மிகவும் வெறுத்த ஒன்று இந்த பவர் கட்..ஆம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்து பாருங்கள் ..தெரியும் ஏன் நான் புலம்புகிறேன் என்று..சம்சாரம் இல்லாமல் கூட இருந்து விடலாம்,ஆனால் மின்சாரம் இல்லாமல் இருக்கவே முடியாது..சுட்டெரிக்கும் கோடை கால மாதத்தில் , அதுவும் இரவில் கூட வியர்த்து கொட்டும் இந்த நேரத்தில் , ஈவு இல்லாமல்,இறக்கம் இல்லாமல், சுமார் பனிரெண்டு மணி நேரம் மின்சார துண்டிப்பு.. மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தில் அவிந்தோம்.புலம்பினோம்,தவித்தோம்,ஏங்கினோம்,..அப்படியே இரவை கடந்தோம்...அநேகமாக பவர் கட்டை பற்றி இந்த வருடம் நான் தான் பதிவை ஆரம்பித்து வைக்கிறேன் என்று தோன்றுகிறது..இது தொடக்கம் தான் என்று நன்றாக எனக்கு தெரியும்..அண்டை வீட்டு காரனிடம் புலம்பும் இந்த விஷயத்தை நான் இந்த பதிவின் மூலமாக சர்வதேச சமூகத்திடம் பகிர்ந்து கொள்கிறேன் என் புழுக்கத்தை ..வியர்வை துளிகளில் நனைந்து கொண்டே ...

Saturday, April 18, 2009

ஐ.பி.எல்-விளம்பர இடைவேளையில் இதை படியுங்கள்


பண மழை கொட்டும் ஐ.பி.எல் விளையாட்டு..
"பதினொன்று முட்டாள்கள் விளையாட,பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு" என்று பிரபல அறிஞர் பெர்னார்ட் ஷா எப்போதோ கூறியிருந்தார்..ஆனால் அவர் கூறியதில் பாதி தான் மிகச்சரியான கருத்து..பாதிக்கருத்து தவறு...ஆம் பதினொன்று முட்டாள்கள் விளையாட என்று கூறியது தான்..தவறான கருத்து ..நம்மை முட்டாள் என்று கூறியது தான் மிகப்பொருத்தம் ...ஆனால் இப்போது பதினோராயிரத்திலிருந்து எண்ணிக்கை சுமார் 111 கோடிகளை தாண்டி விட்டது ..நம்மை முட்டாளுக்கும் அறிவாளிகளின் கூட்டு சதியை பற்றி தான் இங்கு பேச போகிறேன்..குறிப்பாக ஒவ்வொரு பகுதியாக நம் நாட்டை பிரிக்கும் இவ்விளையாட்டின் உள்நோக்கம் ..சரி அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் விளையாடுகிறார்களா என்று பார்த்தால்..ஒரு பெயருக்காக அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.மீதி எல்லாம் வெளிநாட்டு இறக்குமதிகள் ..குறிப்பாக நமது பகுதியின் பேரை கொண்ட அணியில் எத்தனை உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள்...சரி அதெல்லாம் விடுங்கள்..முக்கியமான விஷயத்திற்கு வருவோம்..ஆம் அது தான் துட்டு விஷயம்..குத்து மதிப்பாக நமது பி.சி.சி.ஐ விற்கு இவ்விளையாட்டு மூலம் கிடைக்கப்போகும் வருமானம் சுமார் 8200 கோடி , இது அத்தனைக்கும் காரணம் நாமே தான் ..ஆம்..உலகம் முழுவதும்..குறிப்பாக இந்தியாவில் 40 கோடி பேர் இந்த போட்டிகளை பார்த்து ஏமாறுகின்றனர்..மேலும் கேளுங்கள்..இதனை ஒளிபரப்பும் சோனி மாக்ஸ் என்ற தொலைகாட்சி நிறுவனம் இதுவரை சுமார் 400 கோடி சம்பாதித்துள்ளது..அதாவது விளம்பரத்திற்கான சுமார் 120000 நொடிகள் விற்று தீர்ந்து விட்டன..மிச்சம் அவர்களிடம் இருப்பது 20% விளம்பரத்திற்கான நேரம் மட்டும் தான்..மேலும் இந்த அணிகளின் முதலாளிகளுக்கு சுமார் 7000 கோடி வருமானம் நம்மால் வர இருக்கிறதாம்.இவர்களுக்கு இந்த மாபெரும் சிந்தனை எப்படி தோன்றியிருக்கும் என நினைத்தேன்..அட..நம்ம பழைய பழமொழியில் இருந்து தான் வந்திருக்கு இந்த விளையாட்டு சிந்தனை..அந்த பழமொழி.."ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் " .அதெல்லாம் சரி ஸ்கோர் எவ்வலோனு தெரியலயே..நீங்களும் கண்டினூ பண்ணுங்க மாட்ச்ச ..

Monday, April 13, 2009

கற்றதனால் ஆன பயன்..


எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்கை முறை கண்டு
வயிறு எறிந்தீர்கள்
கலாசாரத்தை கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்கள் சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியென பிடுங்கினீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
"இந்திய ஒளிர்கிறது" என
விளம்பரம் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோசம் தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளை பற்றிக்
கேட்கிறோம்...
"கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?"


நன்றி
செல்வேந்திரன்

Saturday, April 11, 2009

மாத்தி யோசி


தேர்தலை பற்றி அநேகமாக அனைவருமே எழுதி வரும் இந்த நேரத்தில்..நானும் அதே தேர்தலை பற்றி தான் சொல்ல போகிறேன்..ஆனால்..சற்று வித்தியாசமாக..இதை நான் ஒன்றும் புதியதாய் கண்டுபிடித்து கூற வில்லை.ஒரு சின்ன கற்பனை ..இன்றைய தேதியில் கண்டதுக்கெல்லாம் கஸ்டமர் கேர் வந்து விட்டது..அப்புறம் கத்திரிக்காய் நசுங்கிருந்தா கூட கன்சூமர் கோர்ட் வரைக்கும் காய்கறி காரண இழுக்கும் இந்த தேசத்தில் ..ஏன் வாக்காளருக்கு என்று பிரத்யேகமாக ஒரு கஸ்டமர் கேர் ஆரம்பிக்க கூடாது..அதுக்குன்னு ஒரு டோல் ப்ரீ நம்பர் ஏன் இருக்க கூடாது..குறிப்பிட்ட அளவுக்கு மேல் புகார்கள் மீது நடவடிக்கையே எடுக்காமல் போனா அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியை ஏன் ரத்து பண்ண கூடாது..அட்லீஸ்ட் தற்காலிகமாக ..பின்னர் நடவடிக்கை எடுத்த பின்னர் ரிகனக்சன் கொடுக்கலாம் ..பதவியை ..ஏதோ இதல்லாம் கற்பனைல பேசல...ஏன்..தொலைபேசி கட்டணம் கட்டலனா மட்டும் தானா கட்டாகுதுல கனெக்சன் .அந்த மாதிரி இவர்களை இப்படி நடத்துனா தான் அறிவு வரும்..இதெல்லாம் நடக்கிற காரியமா ..அப்படின்னு நீங்க நினச்சா இத காமடியா எடுத்துகோங்கோ ..பரவாயில்லையேன்னு தோனுச்சுனா இத நாலு பேருக்கு சொல்லி சிந்திக்க வைங்க..எது எப்படியோ..மறக்காம கருத்துகளை சொல்லி விட்டு செல்லுங்கள்..

Thursday, April 9, 2009

மாற்றம் தருமா மனித நேய மக்கள் கட்சி

முஸ்லீம் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம் தான் த.மு.மு.க. நீண்ட யோசனைக்குப்பின் அரசியல் கட்சி உருவாக்க நினைத்து உருவானது தான் ம.ம.க...அதாவது மனிதநேய மக்கள் கட்சி ..
தோன்றிய மறுகணமே ..அரசியல் உலகில் ..மிகப்பெரிய்ய எதிர்பார்ப்பை உருவாக்கியது இந்த மனித நேய மக்கள் கட்சி ...இன்று கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டாத நிலையில் ..தனித்து போட்டியாம் ...
இந்த அறிவுப்பும் ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என நான் நினைத்தேன்.ஆனால் இது ரொம்ப தாமதம் ...
இவர்கள் அறிவித்திருக்கும் தொகுதிகள் அனைத்தும் ..ரொம்ப கஷ்டம் ..
அண்ணன் ரிதீஷும் ..தயாநிதி மாறனும் ..அவ்வளவு சீக்கிரம் தோற்க மாட்டாங்க ..
ஆனாலும் பார்ப்போம்..என்ன நடக்க போகிறது என்று ..அரசியலே ஒரு மாதிரி தான்

Monday, March 30, 2009

விட்டில் பூச்சிகள்


ஒரு காலத்துல நம்ம கண் முன்னாடி பகட்டயா , பந்தாவா , காலர தூக்கி விட்டு கிட்டு...பாக்கிற இடமெல்லாம் , நம்மெலாம் போக முடியாத இடமெல்லாம் (கடற்கரை உல்லாச விடுதிகள் , ஆடம்பர நட்சத்திர விடுதிகள் , ஆட்டம் போடுற இடம்) சுத்தி திரிஞ்ச இந்த கூட்டம் இப்ப அவ்வளவா எங்கயும் பாக்க முடிய்யல ...காரணம் காஞ்சு போச்சு ..குறிப்பா இவர்களுக்கு வேலை கொடுத்த அமெரிக்க முதலாளிகளுக்கு (முதலைகள்) காஞ்சு போச்சு ...அது மட்டுமா ...கலாச்சாரத்த கொன்ன இவிங்கள ...இப்ப அதே கலாசாரம் கொன்னுகிட்ட்ருக்கு ...எப்படியா ..சமீபத்துல தற்கொலை செஞ்சுகிட்ட சில கணினி நிபுணர்கள் ...அதற்கு காரணமா எழுதி வச்சது என்ன தெரியுமா ....வரவு எட்டணா செலவு பத்தணா...குறிப்பா பீஸ்ஸா சாப்பிட முடிய்யல ...தண்ணிக்கு பதிலா கோக் குடிக்க முடிய்யல ..டிஸ்கோவுக்கு போக முடிய்யல ...ரெசொர்ட் போக முடிய்யல...ரெண்டாயிரம் ரூபாய்க்கு சட்ட போட முடியல ..நாளியரம் ரூபாய்க்கு பேண்ட்டு மாட்ட முடியல ..ஐநூறு ரூபாய்க்கு ஜட்டி மாட்ட முடியல ...இப்படி சொல்லிகிட்டே போகலாம் ...இது எங்க ப்போஅய் முடிய்ய போகுதோ ...இதெல்லாம் நான் ஏதோ பொறாமையில சொல்லல ..வேற துறையில் ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் அல்லோள் படும் நண்பர்களோட வயிதேரிச்சள்ள இங்க சொல்லல ...இவர்களின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் வருந்துபவனில் நானும் ஒருவன் ...
ஒளியின் வெளிச்சத்தில் மயங்கும் இந்த விட்டில் பூச்சிகளின் முடிவு ?


பறக்கின்றது ஒளியை நோக்கி
அடைந்ததோ அதன் வாழ்வின் இருட்டை