Saturday, April 18, 2009

ஐ.பி.எல்-விளம்பர இடைவேளையில் இதை படியுங்கள்


பண மழை கொட்டும் ஐ.பி.எல் விளையாட்டு..
"பதினொன்று முட்டாள்கள் விளையாட,பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு" என்று பிரபல அறிஞர் பெர்னார்ட் ஷா எப்போதோ கூறியிருந்தார்..ஆனால் அவர் கூறியதில் பாதி தான் மிகச்சரியான கருத்து..பாதிக்கருத்து தவறு...ஆம் பதினொன்று முட்டாள்கள் விளையாட என்று கூறியது தான்..தவறான கருத்து ..நம்மை முட்டாள் என்று கூறியது தான் மிகப்பொருத்தம் ...ஆனால் இப்போது பதினோராயிரத்திலிருந்து எண்ணிக்கை சுமார் 111 கோடிகளை தாண்டி விட்டது ..நம்மை முட்டாளுக்கும் அறிவாளிகளின் கூட்டு சதியை பற்றி தான் இங்கு பேச போகிறேன்..குறிப்பாக ஒவ்வொரு பகுதியாக நம் நாட்டை பிரிக்கும் இவ்விளையாட்டின் உள்நோக்கம் ..சரி அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் விளையாடுகிறார்களா என்று பார்த்தால்..ஒரு பெயருக்காக அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.மீதி எல்லாம் வெளிநாட்டு இறக்குமதிகள் ..குறிப்பாக நமது பகுதியின் பேரை கொண்ட அணியில் எத்தனை உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள்...சரி அதெல்லாம் விடுங்கள்..முக்கியமான விஷயத்திற்கு வருவோம்..ஆம் அது தான் துட்டு விஷயம்..குத்து மதிப்பாக நமது பி.சி.சி.ஐ விற்கு இவ்விளையாட்டு மூலம் கிடைக்கப்போகும் வருமானம் சுமார் 8200 கோடி , இது அத்தனைக்கும் காரணம் நாமே தான் ..ஆம்..உலகம் முழுவதும்..குறிப்பாக இந்தியாவில் 40 கோடி பேர் இந்த போட்டிகளை பார்த்து ஏமாறுகின்றனர்..மேலும் கேளுங்கள்..இதனை ஒளிபரப்பும் சோனி மாக்ஸ் என்ற தொலைகாட்சி நிறுவனம் இதுவரை சுமார் 400 கோடி சம்பாதித்துள்ளது..அதாவது விளம்பரத்திற்கான சுமார் 120000 நொடிகள் விற்று தீர்ந்து விட்டன..மிச்சம் அவர்களிடம் இருப்பது 20% விளம்பரத்திற்கான நேரம் மட்டும் தான்..மேலும் இந்த அணிகளின் முதலாளிகளுக்கு சுமார் 7000 கோடி வருமானம் நம்மால் வர இருக்கிறதாம்.இவர்களுக்கு இந்த மாபெரும் சிந்தனை எப்படி தோன்றியிருக்கும் என நினைத்தேன்..அட..நம்ம பழைய பழமொழியில் இருந்து தான் வந்திருக்கு இந்த விளையாட்டு சிந்தனை..அந்த பழமொழி.."ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் " .அதெல்லாம் சரி ஸ்கோர் எவ்வலோனு தெரியலயே..நீங்களும் கண்டினூ பண்ணுங்க மாட்ச்ச ..

1 comment:

shabi said...

MATCH முடிஞ்சு போச்சு mi வெற்றி