Monday, April 13, 2009

கற்றதனால் ஆன பயன்..


எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்கை முறை கண்டு
வயிறு எறிந்தீர்கள்
கலாசாரத்தை கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்கள் சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியென பிடுங்கினீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
"இந்திய ஒளிர்கிறது" என
விளம்பரம் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோசம் தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளை பற்றிக்
கேட்கிறோம்...
"கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?"


நன்றி
செல்வேந்திரன்

2 comments:

ramalingam said...

கற்றது தமிழ் எடுத்த ராம் இனி கற்றது கணினி எடுப்பாரா!

Anonymous said...

Guys, There is a pathil kavithai for this in latest Ananda vikatan. In my opinion,Both the poems exaggerating the issue!!