Thursday, April 21, 2011

சீமான்-முற்போக்கு முகமூடி அணிந்த போலி புரட்சியாளர்




இயக்குனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...



தாயக விடுதலை போராட்டத்தில் நசுக்கப்பட்டு முள்வேலி முகாம்களில்
சித்திரவதைக்குள்ளாகி வரும் நமது தமிழீழ சொந்தங்களின் உரிமைக்கு மறுமலர்ச்சிக்கு உரக்க குரல்கொடுத்து பரிசாக இரண்டு தேசபாதுகாப்பு சட்ட சிறைகளை பெற்றவர்... குறுகிய காலத்தில் தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் அபிமானத்தை பெற்றவர்.சீமான் வருகைக்கு பிறகு தமிழ் தேசிய அரசியல் முழக்கம் புத்துயிர் பெற்றது என்பதை மறுக்க இயலாது.



மாற்றத்தை விரும்பிய மக்களும் தமிழுனர்வாளர்களும் சீமானை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்றார்கள்... அவரது வீரியமிக்க உரைகள் உணர்வற்றவனையும் உசுப்பேத்தியது. அவர் செல்கிற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரைசுற்றி எப்போதுமே உணர்வுமிக்க இளையர் பட்டாளம் அணிவகுத்தது.



பகுத்தறிவை தமிழனுக்கு போதித்த தந்தை பெரியாரின் பேரன் நான் என சீமான் முழங்கியதை தமிழ் சமூகம் ரசித்தது. தமிழர்கள் சீமானிடம் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்தார்கள் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சீமானின் அரசியலுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் ஏற்பட்டது.


சீமானின் நாம் தமிழர் கட்சி புதிய எழுச்சியை ஏற்படுத்தும் என நடுநிலையாளர்கள் காத்திருந்தனர்.ஆனால் சீமான் ஈழதமிழர்களுக்கு துரோகம் விளைத்த காங்கிரசையும் அதனுடன் கூட்டணிகொண்டுள்ளதிமுகவையும் கருவறுக்க அதிமுக கூட்டணிக்கு ஆதரவு நிலையென அறிவித்தார். அப்போதே தமிழுனர்வாளர்களும் மாற்றத்தை விரும்பிய மக்களும் சீமானின் இந்த அரசியல் சறுக்கலை கண்டு கவலைகொண்டனர். திமுகவிற்கு மாற்றாக அதிமுக என்கிற சீமானின் கோஷம் மக்களிடம் பெரும் விவாதத்தையே விதைத்தது.



வலியபோய் சீமான் அதிமுக அணிக்கு ஆதரவு என அறிவித்தும் அதிமுக அவரை சீண்டவில்லை என்பது ஊர் அறியாத ரகசியமல்ல... சீமான் அதிமுக ஆதரவு நிலையெடுக்க மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்த மதிமுக அதிமுகவின் தலைமையால் உதாசீனபடுத்தப்பட்டது. மதிமுக தேர்தலில் போட்டியிடும் நிலையையே தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. உடணடியாக சீமான் சொன்னார் நாங்கள் அதிமுகவிற்கு ஒட்டுகேட்கபோவதில்லை திமுக காங்கிரஸ் அணிக்கு எதிராவே ஒட்டுகேட்கபோகிறோம். இந்த வார்த்தைகள்


ஆரம்ப கல்வி பயிலும் ஐந்துவயது பிள்ளைக்கும் நகைப்பைத்தான் தந்தது.
அதன் பிறகு காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டுமே பரப்புரை செய்து காங்கிரசை நாம் தமிழர் கட்சி வீழ்த்தும் என்றார். அதன்படி தேர்தல் பரப்புரையும் மேற்கொண்டார். அவரது ஈழதமிழ் மக்களின் நிலைகுறித்த


விளக்கமும் தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் பட்டுவரும் அவலமும் நிச்சயமாக மக்களை காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை...தேர்தல் பரப்புரையின் இறுதிகட்டத்தில் பெரியாரின் பேரன் என தன்னை அடையாளபடுத்திய சீமான் ஈழ மக்களின் அணைத்து துயரங்களுக்கும் காரணமான காங்கிரசையும் அதன் கூட்டணியையும் வீழ்த்தியே தீருவேன் என வீரம் பேசிய சீமான் பரப்புரையினூடே நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியா நாட்டின் அசிங்க அடையாளமான நரேந்திரமோடியை வானளாவ புகழ்ந்துள்ளார். ஏப்ரல் 24 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் தனது நேர்காணலிலும் அவர் மோடியை பாராட்ட தவறவில்லை. கடந்த சில காலமாக தமிழக முஸ்லிம் அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு குஜராத் கலவரத்தையும் அங்கு முஸ்லிம்கள் கருவருக்கப்பட்டதையும் பேசிவந்த சீமான் திடீரென மோடிக்கு பாசவலை வீசுவதுதான் நமக்கு சந்தேகத்தை வலுக்க செய்கிறது.



நரேந்திரமோடி மிருகங்களைவிட கேவலமான பிறவி என்பதை நாடே அறியும். அவன் தாய் பாலுக்குப் பதிலாக மனித மாமிசத்தை தின்று வளந்தவன் என்பதை குஜராத்தில் நடந்த கலவரங்களின்போது மோடி திடமாகவே பதிவு செய்தான்.
மோடியின் ஆட்சியில் குஜராத் பலவகைகளிலும் முன்னேறி உள்ளதாம் இருக்கலாம் ஆனால் அந்த முன்னேற்றத்தில் அடித்தளத்தில் முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட்ட உண்மையை சீமானுக்கு யாரும் சொல்லவில்லையா...?



சாயிராஹ் என்கிற நிறைமாத கர்பிணியான என் சகோதரி மோடியின் வகையறாக்களால் ஈவிரக்கம் இல்லாமல் கற்பழிக்கப்பட்டு அவளது வயிற்றைகீறி உள்ளே உயிர்வாழ்ந்த சிசுவை வெளியில் எடுத்து எரியும் நெருப்பில் எரிந்து மகிழ்ந்தார்களே... அந்த நயவஞ்சகன் மோடியையா பெரியாரின் பேரன் புகழ்வது...!!!
இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம் மோடியை நவீன நீரோ மன்னன் என வர்ணித்ததே ரோமாபுரி நகரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துகொண்டிருந்தானாம் அந்த வேலையைத்தான் மோடி


குஜராத்தில் மூவாயிரம் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது பல லட்சகணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடபட்டபோது செய்துகொண்டிருந்தான் என இந்திய உச்சநீதிமன்றம் சொன்னது அந்த மோடியைத்தான்.

இராமன் என்கிற ஆடு மாடுகளை மேய்ப்பதை தொழிலாக கொண்ட தலித் சமூக சகோதரன் சற்று இளைப்பாற ஒரு கூரைகொட்டகையில் அமர்ந்தான் அந்த கொட்டகை மேல்சாதிகாரனுக்கு சொந்தமானது என்கிற ஒரே காரணத்திற்க்காக சகோதரன் இராமன் கட்டிவைக்கப்பட்டு கல்லால் அடித்துக்கொல்லப்பட்டதும் குஜராத்தில்தான் இதே மோடியின் ஆட்சிகாலத்தில்தான் இப்படியாக மக்கள் நேசிக்கும் மோடியைத்தான்


இலங்கையில் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என சொன்ன சீமான் புகழ்ந்துள்ளார்.
சீமான் அவர்களே ஏன் இந்த கொள்கை பின்னடைவு... ஏன் இந்த முரண்பாடு... ராஜபக்சே எந்தளவிற்கு கொடுமைகாரனோ அதைவிட ஆயிரம் மடங்கு கொடுமைகாரன் நரேந்திரமோடி அவனை தவிர உதாரணம் காட்ட உங்களுக்கு வேறு முதலமைச்சரே கிடைக்கவில்லையா...?




ஒரு வாதத்திற்கு நரேந்திரமோடியை மண்ணை நேசிக்கும் தலைவன் என்பதை ஏற்றுகொள்வதாக வைத்துகொண்டு உங்களிடம் ஒன்றை கேட்கிறேன் முஸ்லிம்களை வேரறுத்து மோடி மண்ணையும் மக்களையும் நேசிக்கும் தலைவன் என்றால்... எங்கே சிங்கள மக்களின் உரிமைகள் பங்கிடபட்டுவிடுமோ என அஞ்சி நமது தமிழ் சொந்தங்களை வெடிகுண்டுகளின் கோரபசிக்கு இரையாக்கி வெற்றிகளிப்பில் திளைத்துள்ள


அயோக்கியன் ராஜபக்சேவை சிங்கள மண்ணையும் சிங்கள மக்களையும் நேசிக்கும் மகத்தான தலைவன் என யாரும் சொனால் பொங்கிவரும் உங்கள் ரத்தம் சுண்டிவிடுமா...?



சீமான் அவர்களே உங்கள் பின்னால் எந்த சுயநல சிந்தனையும் இல்லாமல் தமிழர்களின் வாழ்வியல் மாற்றத்திற்காக அணிவகுக்கும் உங்கள் அன்பு நாம் தமிழர்களுக்கு நீங்கள் எந்த பாதையை காட்டப் போகிறீர்கள்... உங்களிடம் இருந்து வீரியமான தமிழ் தேசியத்தை அரசியல் மாற்றுகளத்தை எதிர்பார்க்கும் தமிழர்களில் நானும் ஒருவன்...




நரேந்திரமோடி என்கிற ஒற்றைவரி நீங்கள் தமிழனுக்காக சிறைபட்டு தமிழர்களின் மனதில் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை அசைக்கவே செய்துள்ளது...


நன்றி
நிதர்சனங்கள் 

12 comments:

Anonymous said...

போலி புரட்சியாளர் சீமான், ஜெயலலிதாவிடம் பொறுக்கித் தின்னது போதாதின்னு நரேந்திர மோடியை நக்கிப் பிழைக்க கிளம்பிட்டா

தமிழன் said...

இவன் தமிழன் பெயரை சொல்லி ஏய்க்க வந்த புதிய அரசியல்வாதி. இவன் பெரியாரின் பேரன், மொடி என்ரெல்லாம் பேசினால் பெரியாள் ஆஹிவிடலாம் என்று நினைக்கிறான். முன்பு போல் இல்லை தமிழ் மக்கள் இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படி ஏமாறுவார்கள், இவன் வேசம் பழிக்கது.

Olerzor said...

சீமான் தன் ஜாதியில் தீவிர வெறி கொண்ட உறுப்பினராக இருக்கிறான். அண்மையில் இவன் ஜாதியைச் சேர்ந்தவர்கள், ஜாதிக் கூட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமானும், கருணாஸ் போன்ற வெறியர்களும் இதர சாதியினரைத் தாக்கிப் பேசியுள்ளனர்.
இந்த சீமானா தமிழர் தலைவன்?

குழலி / Kuzhali said...

வணக்கம்,
சீமான் மோடியை புகழ்ந்து பேசுவதாக தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகின்றது... எந்த பேச்சையும் context ஐயும் முன்னாலும் பின்னாலும் வெட்டிவிட்டால் எப்படி வேண்டுமானாலும் திரிக்க இயலும்... காந்தி கொலை செய்ய சொன்னார் என்று அவர் பேச்சிலிருந்தே ஆதாரம் காட்ட இயலும் சீமானுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் இம்மாதிரியான திரிப்புகளுக்கு பலியாகாதீர்கள்...

சீமானின் மோடி பற்றிய பேச்சை இந்த சுட்டியில் கேட்கலாம்

http://www.youtube.com/watch?v=WxI7DGnIxw4&playnext=1&list=PL95B11E8857AEC03A

இது தொடர்பாக எழுதப்பட்ட பஸ் விவாதம் இங்கே https://profiles.google.com/blogsking/posts/cgxWNc2EYc1

வழக்கம்போல உனா பினாக்கள் ஒன்லைனரை திருத்தி திருகுத்தாளம் போடும் வேலையை செய்துள்ளார்கள்...

கருணாநிதி காங்கிரசோடு ஏன் கூட்டுவைத்தாய் என்பதற்க்கு கருணாநிதி மத்தியில் ஆளும் காங்கிரசோடு கூட்டணி வைத்தால் தான் நம் மாநிலத்துக்கு நல்லது செய்ய முடியும் என்ற சொல்வது தவறு, போரை நிறுத்தமுடிந்ததா? படுகொலைகளை நிறுத்தமுடிந்ததா? ஆனால் எதிர் எதிர் அரசியல் செய்து கேரளாவிலே கம்யூனிஸ்ட்கள் செயல்படவில்லையா எதிர் எதிர் அரசியல் செய்யும் மோடி குஜராத்தில் இலவசமில்லையே இலட்சம் கோடி கடன் அடைத்துள்ளார்களே இந்தியாவின் முதல்மாநிலமாக வந்துள்ளதே அவரென்ன காங்கிரஸ் கட்சிக்கு தாலாட்டிக்கிட்டா இருக்கார் என்று கூறியுள்ளார்....

பாகம் 2 ல் 6ம் நிமிடத்திலிருந்து 7ம் நிமிடத்தை பார்க்கவும்
----------------
இன்றைக்கு சீமானால் அதிகம் பாதிக்கப்படுவது திமுக... திமுகவின் மற்றும் கருணாநிதியின் போலி தமிழுணர்வு சீமானால் அம்மணமாக்கப்படுவதால் எதையாவது செய்து சீமான் மீது கோபத்தை உருவாக்க வேண்டுமென இம்மாதிரியான திருட்டுத்தனங்கள் செய்யப்படுகின்றன... மோடியைமட்டுமல்ல கேரள கம்யூனிஸ்ட்களையும் உதாரணம் காட்டியுள்ளார்...

குழலி / Kuzhali said...

//சீமான் தன் ஜாதியில் தீவிர வெறி கொண்ட உறுப்பினராக இருக்கிறான். அண்மையில் இவன் ஜாதியைச் சேர்ந்தவர்கள், ஜாதிக் கூட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமானும், கருணாஸ் போன்ற வெறியர்களும் இதர சாதியினரைத் தாக்கிப் பேசியுள்ளனர்.
//
சீமான் என்ன சாதி தெரியுமா? சீமான் முக்குலத்தோர் சாதியில் பிறந்தவர் அல்ல... கருணாஸ் தான் முக்குலத்தோர் ... சீமான் எந்த சாதியென்றே தெரியாமல் சீமானை தேவர் சாதிவெறியராக காட்ட முயல்கிறார்கள் இதையெல்லாம் முறியடித்து சீமான் வெளிவருவார்...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏக இறையின் அருள் என்றென்றும் நிலவட்டும்
குழலி,
சீமானை போல வழவழா என்று பேச நான் விரும்பவில்லை. இலங்கையின் அதிபர் ராஜபக்சே சிறந்ததொரு நிர்வாகத்தை இனி தந்தால் அவர் மீதுள்ள படுகொலை குற்றச்சாட்டுக்களை எல்லாம் சீமான் வாபஸ் வாங்கி விட்டு ராஜபக்சேயை மோடியை புகழ்ந்தது போல புகழ்ந்து பேசுவாரா? ஜெயலலிதா மோடியை போல சிறந்த நிர்வாகத்தை தருவார் என்று பத்திரிக்கையில் சொல்லியிருக்கிறாரே. இதுவும் பொய்யா? சிறந்த நிர்வாகம் என்பது முஸ்லிம்களை கூட்டம் கூட்டமாக கொல்வதா? இரத்த குடிக்கும் ஓநாய் மோடியையும் சர்வதேச பயங்கரவாதி பிரபாகரனையும் இதனால தான் சிறந்த தலைவர்கள் என்று சீமான் சொல்கிறாரா? இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் போல இலங்கையில் விடுதலைப் புலிகள். இரண்டு குருப்பும் முஸ்லிம்களை கருவருப்பதையே நோக்கமாக கொண்டிருப்பவை. எனவே தமிழக விடுதலைப்புலி(சீமான்) குஜராத்தின் விடுதலைப்புலியான மோடியை புகழ்வது இயல்பே. ஏற்கெனவே பால்தாக்கரேவை மானசீக தலைவராக மக்கள் தலைவராக ஏற்றுக் கொண்டவர் தான் இந்த சீமான். எனவே சீமானின் மோடி ஆதரவு பேச்சில் எனக்கொரு ஆச்சர்யமும் இல்லை. பாவம் சில விட்டில் பூச்சிகள். அவரை சிறந்த மதச்சார்பற்ற தலைவன் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வேண்டுமானால் இது ஷாக்காக இருக்கலாம்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

முதலில் மோடி சிறந்த நிர்வாகத்தை தான் அளிக்கிறாரா என்பதை சீமானும் குழலியும் சென்ற மாத அவுட்லுக்கை வாங்கி படித்து தெரிந்து கொள்ளலாம். அப்போது தெரியும் வைப்ரன்ட் குஜராத் லட்சணத்தை. சீமானுக்கு இருக்கும் விடுதலைப்புலி பாசம் ஈமானோடு இருக்கிறோம் என்று சொல்லும் சில முஸ்லிம் இயக்க புல்லுருவிகளுக்கு இல்லையே என்பது தான் என்னுடைய வருத்தம். பிரபாகரனின் சாவுக்கு பழிவாங்க காங்கிரசை, திமுகவை எதிர்க்கும் சீமானுக்கு முட்டுக் கொடுக்கும் ஈமானிய பேர்வழிகள் இனிமேலாவது திருந்த வேண்டும். என்ன இருந்தாலும் விடுதலைப்புலிகளும் அவர்தம் ஆதரவாளர்களும் முஸ்லிம்களின் அழிவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ஆதரிக்க கூடியவர்கள் என்பதை சீமானோடு சேர்ந்திருக்கும் முஸ்லிம் இயக்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருக்காலும் விடுதலைப்புலிகள் மனிதாபிமானிகள் அல்ல. அவர்களின் ஆதரவாளர்கள் சென்ற தேர்தலில் இரத்த யாத்திரை நாயகன் அத்வானியை பிரதமர் பதவியில் அமர்த்த வேலை பார்த்தவர்கள். இலங்கை எம்.பி சிவாஜி லிங்கம் (விடுதலைப்புலி ஆதரவாளர் ) அத்வானியோடு கைகோர்த்து வேலை பார்த்ததை மறக்கவில்லை நாங்கள். ஒருவேளை சிலர் இதை மறந்திருக்கலாம் அல்லது மறைக்க பார்க்கலாம்.

Anonymous said...

அட இவனுங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்!!!! எவனையும் எதையும் முன்னே செல்ல விடமாட்டார்கள்

Anonymous said...

நான் சொன்னது இந்த பதிவை எழுதியவரை. சீமானை அல்ல

மர்மயோகி said...

இதுகள் பிணந்தின்னும் ஓநாய்கள்...
தமிழ்நாட்டில் நக்கிப் பிழைத்து
விடுதலைப்புலிகளிடம் இரந்து வாழும் பிணந்தின்னிகள்..

மர்மயோகி said...

காதர் அவர்களே...விடுதலைப்புலிகளுக்கு அடிவருடும் அனைவரும் இந்தியாவின் தேச துரோக நாய்களே.,
அந்த நாய்கள் சிறையிலிடப்படும் நாளும் சீக்கிரம் வரும்
தேச துரோக நாய்களும், மோடி என்ற மிருகமும் கூட்டு சேரத்தான் செய்யும்..
சீமான் உள்ளே போகப்போவது ஜெயலலிதாவால்தான்..
அந்த பிணந்தின்னி மிருகம் விடுதலைப்புலிகளிடம் வாங்கிய பிச்சைக்கு..இங்கே குரைத்துகொண்டிருக்கிறது..
அதற்க்கு கூடிய சீக்கிரம் பதில் சொல்லும்..

Anonymous said...

see..seemaan supporting modi..modi supporting saffron..next..seemaan is heading for nagpur(RSS)..
FOLLOW THIS LATEST NEWS
http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110422_modiallegation.shtml