விதைகள் விசமாகி ,
வெள்ள எரிக்கஞ்செடி பயிறாகி !
விளைச்சலும் பொய்யாகி ,
வீழ்ந்தானே விவசாயி !
ஆடியிலே பட்டங்க்கண்டு .
தேடியே விதைவிதைத்து !
ஆழ உழுதானே ,
அன்னாந்து பார்த்தானே !
அடைமழை பெய்யவில்லை ,
ஆறு குளம் நிறையவில்லை !
புயல் மழையும் பொய்யாகி ,
பூந்தோட்டம் சருகாகி !
புலம்பல் பொருளாகி !
போனானே (விவசாயி) பிணமாகி !
காவிரியை பூட்டிவைக்கும் ,
கர்நாடக சண்டியரே !
நீதிக்கு தலைவணங்கா ,
நீமட்டும் நிரந்தரமா ?
மார்கழி விடை கொடுக்க ,
மறுபடியும் தை பிறக்க !
மகிழ்ச்சியில் மனங் குளிர ,
மண் உழுதோர் யா ரிருக்கார் !
பூமிக்கு நீர் வார்க்கும் ,
புகழெல்லாம் இறைவனுக்கே !- என
பூரித்து பொங்கல் வைக்க ,
புதுநெல்லும் தான் பறிக்க !
தங்கமழை பொழியாதோ ?
தமிழகமும் குளிராதோ ?
தாகமும் தீராதோ ?
தமிழர் முகம் மலராதோ ?
நன்றி
பிறைத்தமிழன்
No comments:
Post a Comment