இலங்கையில் யுத்தம் மேலும் மேலும் தீவிரம் அடைந்து வரும் இச்சூழலில் அரசியல்வாதிகளின் கருத்து மற்றும் அணுகுமுறை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது..இதில் முக்கியமான மாற்றம் ஜெயலலிதா கூறிய ஈழ அதரவு கருத்து தான்..இப்படி நாள் தோறும் அரசியல் அரங்கில் வெளியிடப்படும் அறிக்கைகள் செத்து கொண்டிருக்கும் தமிழனை காப்பாற்றுமா...
இன்று முக்கிய திருப்பமாக புலிகள் யுத்த நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளதும்,அதை சிங்கள அரசு நிராகரித்ததும் நாம் அறிந்ததே..இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஓர் இரவு காத்திருப்போம் என்று அறிக்கை விடுத்துள்ளார் ..புரியாத புதிராக இருக்கிறது இந்த ஓர் இரவு.முன்னாள் முதல்வர் ஒரே இரவில் எழுதிய கதை தான் பின்னால் ஓர் இரவு என்று திரைப்படமாக எடுக்கப்பட்டது.அதே போல் இவரும் ஒரே இரவில் என்ன செய்ய போகிறார் என்று ஆவலாக உள்ளது ..சரி ஓர் இரவை காத்திருந்து தான் பார்ப்போம்..நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்.