Thursday, December 15, 2011

முல்லைபெரியாறு பிரச்சனையும்..ஈழத்தமிழர்களின் அணுகுமுறையும்





முல்லைப்பெரியாறு அணை தீர்மானம் இன்று சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது,,ஒரு மனதாக.... காரணம் இது தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சினை..குறிப்பாக தென் தமிழகத்தை சார்ந்த என் போன்றோர்களுக்கு இப்பிரச்சினை வாழ்வாதாரத்திற்கும் ஒரு படி மேல். இப்பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டாலும்..தமிழ்நாடு விடுவதாய் இல்லை. "என் தங்கம் ..எனது உரிமை" என்ற புரட்சிகர கோஷத்தை பரப்புகிறது மலையாளிகளின் நகைக்கடை விளம்பரம்."என் அணை..எங்கள் உரிமை" என்று தமிழகம் எடுத்துக்கொள்ளும் என நம்புகிறேன். 
தமிழகமே இப்பிரச்சனையில் ஒன்று பட்டுள்ள நிலையில்..நான் பல நாட்களாக  பதிவுலகை சற்று உன்னிப்பாக கவனித்து வருகிறேன்..குறிப்பாக ஈழத்தமிழ் சகோதரர்கள் இப்பிரச்சினையை எவ்வாறு அணுகு கிறார்கள் என்று ..எத்தனை பேர் இப்பிரனையை பதிவிட்டுருக்கிரார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால்...ம்ஹூம்...குறிப்பாக என்னை போன்றோர்களெல்லாம் ஈழ தமிழர்களுக்காக..போர் நடைபெற்ற சமயத்தில் இத்தீப்பந்தத்தை கொளுத்த ஆரம்பித்தேன்..ஆனால்..தமிழகத்தில் ஏதாவது பிரச்சினை என்றால்..சர்வதேச தமிழ் சமூகத்தில் கனத்த மௌனம் நிலவுகிறது...இன்று தமிழ்மணத்தில் முதலிடம் பிடித்த பதிவை படித்து பாருங்கள். யோகராஜா சந்துரு என்பவர் மட்டக்களப்பில் விபச்சாரம் கலை கட்டுவதாகவும்..முஸ்லீம்கள் அதனை முன்னிறுத்தி செயல்படுவதாகவும்..பதிவிட்டு..அதிக ஹிட்டுகளை குவித்துள்ளார்..காவிக்கொடி ஈழத்திலுமா? 
நீர்..நிலத்தை விட முக்கியத்துவம் வாய்ந்தது..முல்லை பெரியார் அணை..தமிழகத்தின் தன்மான பிரச்சினை..தமிழர்களின் தன்மான பிரச்சினை. சர்வதேச தமிழ் சமூகமே..மௌனம் கலைத்து..தமிழக மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பதிவிடுங்கள்..ட்வீட் செய்யுங்கள்.முடிந்தால் போராட்டம் நடத்துங்கள்...தமிழன் யார் என்பதை மலையாளிகள் முதல் கொலையாளிகள் வரை தெரிந்து கொள்ளட்டும்.






Saturday, December 10, 2011

அரசியல் கோமாளி சு.சுவாமி ஹார்வர்டில் இருந்து நீக்கம்..





அரசியல் குள்ள நரி சுப்பிரமணிய சுவாமியை அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகம் நீக்கியுள்ளது.  மேலும் அவர் கற்றுத் தரும் 2 பொருளியல் பாடப் பிரிவுகளையும் நிர்வாகம் நீக்கியுள்ளது. 2011 ஜூலை 16 ம் தேதி மும்பையில் இருந்து வெளியாகும் டி.என்.ஏ நாளிதழில் முஸ்லீம்கள் குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரையை சுவாமி எழுதினார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஹார்வர்டு பல்கலைக் கழகம் அவரை நீக்கியுள்ளது. 2012 ம் ஆண்டுக்கான பாடப் பிரிவுகள் குறித்த இறுதி முடிவெடுக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் கூட்டம் நடந்தது. அப்போது சுவாமியால் எடுக்கப்பட்டு வரும் 2 பொருளியல் பாடங்களை நீக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.